Monday, April 29, 2013
ஆரோக்கிய சமையல்
Tuesday, April 23, 2013
சமையல் குறிப்பு - 2
சோயா பீன்ஸ் - 1 கப்
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சம் பழம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கறிமசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
ரொட்டித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* சோயா பீன்சை முதல் நாளிரவே ஊற வைத்து கொள்ளவும்.
* ஊறிய சோயா பீன்சை வேக வைத்து நைசாக மசித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, சோம்புத் தூளைப் போட்டு, பொரியவிட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* இப்போது மசித்த சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளறி மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறி மசாலாத் தூள் சேர்க்கவும்.
* அப்படியே உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து பிறகு இறக்கி வைக்கவும்.
* சிறு உருண்டைகளாக எடுத்து விரும்பிய வடிவில், அளவில் கட்லெட்டுகள் தயாரிக்கவும்.
* அதை ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து தோசைக்கல்லை சூடாக்கி அதில் இரண்டு இரண்டாகப் போட்டு சுற்றிலும் நெய், எண்ணெய் விட்டு முறுக விட்டு எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், காரட், பீட்ரூட், வெள்ளரி துண்டுகளால் அலங்கரித்து தக்காளி சாஸூடன் பரிமாறலாம்.
சுவாரசியமான குறிப்பு
* இது என்ன `கட்லெட்' என்பதை நீங்களே சொன்னால்தான் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியும். `இது என்ன கட்லெட் சொல்லுங்க பார்க்கலாம்?' என்று ஒரு சின்ன `குவிஸ்' கேள்வி கேட்டு விருந்தை சுவாரசியமாக்கி விட்டு பிறகு சோயா கட்லெட்டை பரிமாறலாம்.
* சோயாவின் சிறப்பு பற்றி ஊட்டச்சத்து வல்லுனர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் சத்துக்கள் நமக்குள் நிலைகொள்ள இதேபோல் விதவிதமான சோயா உணவு தயாரித்து உண்ணலாமே!
சமையல் குறிப்பு
சோயா பக்கோடா
வெங்காயம் – 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு–3(வேக வைத் து மசித்தது)
பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)
கடலைப்பருப்பு – 2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
எள்ளு – 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சிக்கன் 65
விரிவுரை:
தேவையான பொருட்கள்:
செய்முறை:
• எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக சிக்கனுடன் சேர்த்து பிரட்டவும்.
• மசால் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடனும்.
• கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
• சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
• டேஸ்டி சிக்கன் 65 ரெடி !!!
அவரை முட்டை பொரியல்
விரிவுரை:
தேவையான பொருட்கள்:

தாளிக்க:
செய்முறை:
• வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
• வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி ஓவ்வொன்றாக தாளிக்கவும்.
• நறுக்கிய அவரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
• பின் கால் கப் நீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
• காய் வெந்தவுடன், 2 முட்டையை உடைத்து ஊற்றி அடி பிடிக்காமல் நன்றாக கிளறவும். வேண்டுமானால் கொஞ்சம் எண்ணெய் உற்றிக் கொள்ளலாம்.
• சுவை மிகுந்த அவரை-முட்டை பொரியல் தயார்.
கோபி 65
விரிவுரை:
தேவையான பொருட்கள்:

செய்முறை:
• பின் அதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த நீரில் 10 நிமிடங்கள் போடவும்.
• ஒரு பாத்திரத்தில் காலிப்பிளவர் பூக்களை போட்டு, அதனுடன் 65 பவுடர், கார்ன் மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் தேவையான உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி, காலிப்பிளவரை போட்டு சிவந்ததும் எடுக்க வேண்டும்.
• கிரிஸ்பியான கோபி 65 ரெடி.
Wednesday, March 20, 2013
அறுசுவை உணவு
ஜவ்வரிசி கட்லெட்
3-4 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2-3 விசில் விட்டு வேக வைத்து, தோலுரித்து குளிர வைக்க வேண்டும்.
மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியின் இலைகளை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.சுவைக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதில் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Wednesday, November 28, 2012
அறுசுவை உணவு
தேங்காய் பால் புலாவ்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
காராமணி மசாலா
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சேமியா பொங்கல்
பயத்தம் பருப்பு - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது (துருவியது)
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
Thursday, October 18, 2012
உலக செய்திகள்
36 கி.மீ. உயரத்திலிருந்து குதித்து ஒலியை விட வேகமாக பறந்த மனிதர்!
நவராத்திரி ரெசிபி
கோதுமை அல்வா
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
சுவையான... பிரட் ஜாமூன்
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
கடலைப் பருப்பு ஸ்வீட்
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
கோதுமை அப்பம்!
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பவுடர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
பூர்ண கொழுக்கட்டை
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!
Sunday, October 14, 2012
அசைவம் உணவுகள் !
முட்டை பொரியல்
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
இறால் மசாலா
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சிக்கன் குருமா
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மட்டன் கீமா புலாவ்
கொத்துக்கறி - 250 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
முந்திரி - 1/4 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
Friday, July 20, 2012
கருவாச்சி காவியம்
- வைரமுத்து
------------------------------------------
புத்தகம் : கருவாச்சி காவியம்
ஆசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 2006
வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்
கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.
Tuesday, October 25, 2011
அலை ஓசை

'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று தொடங்கிப் படிக்கத் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குகிறோம்.
லிங்க்
சிவகாமியின் சபதம்

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை,
காஞ்சி முற்றுகை,
பிக்ஷுவின் காதல்,
சிதைந்த கனவு
என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.
லிங்க்
குறிஞ்சி மலர் நாவல்
அன்பு நண்பர்களுக்கு திரு நா பார்த்தசாரதி அவர்கள் எழுதி கல்கியில் தொடராக வெளி வந்த முழு நீள நாவல் குறிஞ்சி மலர் லிங்க்
படித்து மகிழுங்கள்...
குறிஞ்சி மலர்
என் நெஞ்சத் தோட்டத்தில்
அவள் நினைவு மொட்டுக்கள்
நொடிக்கு நொடி மலரும்
அதிசய
குறிஞ்சி மலர்
விவேகானந்தரின்
விவேகானந்தரின் பொன்மொழிகள்
-
- கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
-
- உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
-
- செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-
- வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
-
- உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
விவேகானந்தரின் விவேக கதைகள் லிங்க்
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் லிங்க்
பொன்னியின் செல்வன்
முதல் பாகம் - புது வெள்ளம்
இரண்டாம் பாகம் - சுழற்காற்று
மூன்றாம் பாகம் - கொலை வாள்
நான்காம் பாகம் - மணிமகுடம்
ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்
பொன்னியின் செல்வன் ஆகிலத்தில் லிங்க்
பொன்னியின் செல்வன் தமிழ் பதிப்பகம் லிங்க்