Wednesday, March 20, 2013

அறுசுவை உணவு

வாழைப்பழ போண்டா


பொதுவாக மாலை வேளை வந்தாலே, ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பஜ்ஜி, வடை, போண்டா என்று டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், அலாதியான சந்தோஷம் கிடைக்கும். அத்தகைய வகையில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழத்தை வைத்து போண்டா செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 2 மைதா மாவு - 1 1/2 கப் சர்க்கரை - 1/4 கப் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அந்த மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது இனிப்பான வாழைப்பழ போண்டா ரெடி!!!

ஜவ்வரிசி கட்லெட்

பெரும்பாலும் கட்லெட்டானது காலை உணவாகவோ அல்லது மாலை உணவாகவோ சாப்பிடக் கூடியது. அதிலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு வகையான ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரியுமா? இந்த கட்லெட் செய்வது மிகவும் ஈஸியானது. அதிலும் இந்த கட்லெட்டிற்கு முக்கியமான பொருள் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு தான். ஆகவே ஜவ்வரிசி கட்லெட் செய்யத் தெரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிமையான முறையில், படிப்படியாக எப்படி செய்வதென்று தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் விடுமுறை நாட்களில் செய்து சாப்பிடலாம். சரி, ஜவ்வரிசி கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

இரவில் படுக்கும் போதே 250 கிராம் ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3-4 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 2-3 விசில் விட்டு வேக வைத்து, தோலுரித்து குளிர வைக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு குளிர்ந்ததும், அதனை மசித்தோ அவ்வது துருவியோ வைத்துக் கொள்ள வேண்டும்.

மசித்த உருளைக்கிழங்கை ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கொத்தமல்லியின் இலைகளை பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ள வேண்டும்.சுவைக்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இதில் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை, ஜவ்வரிசி மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையில் உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதோ சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


Wednesday, November 28, 2012

அறுசுவை உணவு

தேங்காய் பால் புலாவ்

சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. அத்தகைய புலாவ் ரெசிபியில், நாம் தேங்காய் பால் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் மட்டும் இருக்குமாறு வைத்து, மீதமுள்ள எண்ணெயை எடுத்துவிடவும்.

பின்னர் அந்த எண்ணெயில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து, லேசாக வறுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த பாலை குங்குமப்பூவில் சேர்த்து, குங்குமப்பூவை நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது தேங்காய் பால், பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து, பாலில் அரிசி வெந்து, நீர் சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அரிசியானது வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான தேங்காய் புலாவ் ரெடி!!!

காராமணி மசாலா

 பீன்ஸ் வகையில் ஒன்றான காராமணியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதனை மசாலா செய்து சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காராமணியை அரைமணிநேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, காராமணியை கழுவி போட்டு, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைக்கவும். பிறகு ஒருவாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மிளகாயை, தேங்காய், பூண்டு, புளி, சிறிது வேக வைத்துள்ள காராமணி ஆகியவற்றோடு அரைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளியை போட்டு, தக்காளியின் தோலை உரித்து, அதனையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

சேமியா பொங்கல்

சனிக்கிழமை அன்று அனைவருக்கும் பொதுவாக விடுமுறையாக இருக்கும். அப்போது சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியெனில் அதற்கு சேமியா பொங்கல் சரியாக இருக்கும். அந்த சேமியா பொங்கலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்
பயத்தம் பருப்பு - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது (துருவியது)
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்கவும்.

பின் அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.அதே நேரத்தில் மற்றொரு பக்கம் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியாவில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 



Thursday, October 18, 2012

உலக செய்திகள்


36 கி.மீ. உயரத்திலிருந்து குதித்து ஒலியை விட வேகமாக பறந்த மனிதர்!



ரோஸ்வெல்: வானில் 36 கி.மீ. உயரத்தில் இருந்து தரையில் குதித்து, ஒலியை விட வேகமாக பயணித்து, தரையை பத்திரமாக வந்து அடைந்துள்ளார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெலிக்ஸ் பவும்கார்ட்னர் (வயது 43) என்ற ஸ்கை டைவர்.

நவராத்திரி ரெசிபி


கோதுமை அல்வா

நவராத்திரி என்றாலே அது ஒன்பது நாட்கள் நடக்கக்கூடிய ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது ஒன்பது நாட்களும், ஒன்பது விதமான இனிப்புகளை செய்து, கடவுளுக்கு படைத்து வருவார்கள். அத்தகைய இனிப்புகளில் எளிதாக செய்யக்கூடிய வகையில் கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)
கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
இப்போது சுவையான கோதுமை அல்வா ரெடி!!!
குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.



சுவையான... பிரட் ஜாமூன்


பிரட்டை வைத்து குலாப் ஜாமூன் போல் செய்து கொடுக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 3
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட் வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.

கடலைப் பருப்பு ஸ்வீட்


ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்களே இல்லை. அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் பருப்பை வைத்து செய்யும் ஸ்வீட்டின் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்காது. இப்போது அந்த பருப்பு வகையில் கடலைப்பருப்பை வைத்து எப்படி ஸ்வீட் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை கால் மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் அரை கப் சர்க்கரையை போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோவா, ஏலக்காய் தூள் போட்டு, கைகளில் நெய் மற்றும் சோடா உப்பை தடவிக் கொண்டு, இவற்றை நன்கு வடை போன்று தட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ளவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவுத் தண்ணீரை ஊற்றி, 2 1/2 கப் சர்க்கரையை போட்டு, கம்பிப் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி, அதில் பொரித்தவற்றை போட்டு எடுத்து, சர்க்கரைப் பொடி, முந்திரி பொடி, பாதாம் பொடி மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றில் போட்டு பிரட்டி எடுத்து, தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின் அதன் மேல் உலர்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது சுவையான கடலைப் பருப்பு ஸ்வீட் ரெடி!!!

கோதுமை அப்பம்!

 கோதுமை அப்பத்தை வீட்டில் ஈஸியாக எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் பவுடர் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் பவுடர், ஏலக்காய் தூள், சோடா பவுடர் மற்றும் தண்ணீர் ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய்யை ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு, பொரிக்க வேண்டும்.
இப்போது கணபதிக்குப் பிடித்த கோதுமை அப்பம் ரெடி...

பூர்ண கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.
இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!

உடல் உறுப்பு தானம்


உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!

'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?
18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
 தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?
பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.
உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது னரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம். ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், னரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன. மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.
உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள். கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது. அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த நீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகள் விறைத்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கலவைகள் உள்ளன. அவை 'வயாஸ்பான் திரவம்', 'யுரோ கால்லின்ஸ்" திரவம், 'கஸ்டோயியல்' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
நம்மிடையே உள்ள ஆதாரங்களின்படி 1902-ம் வருடம் முதன் முதலாக 'அலெக்ஸில்' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
1905-ம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918-ம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954-ம் ஆண்டுதான், அமெரிக்காவின் 'பாஸ்டன்' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
1954-ம் ஆண்டு பீட்டர் பென்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960-ம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
196-ம் ஆண்டு 'கொலராடோ'விலுள்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1965-ம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் 'கேப்டவுன்' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 'டென்னிஸ் டார்வெல்' என்பவரின் இதயத்தை 'லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி' என்பவருக்கு பொருத்தினார்.
1968-ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1981-ல் முதன் முறையாக ஒரேநேரத்தில் இதய, நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் நடைபெற்றது.
1983-ம் ஆண்டு 'சர். மாக்டியா கூப்' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986-ம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உள்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.
2001-ம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005-ம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொ,துவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.
சீராட்டி பாராட்டி வளர்த்த நம் உடல், இறந்தபின் மண்ணுக்குள் இருக்கும் புழு, பூச்சிகள் அரித்து வீணாகி போக வேண்டுமா?
மாறாக, பிறந்து, வாழ்ந்து, இறந்த பின்னரும் நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் பலரின் உடம்பின் மூலம் இந்த உலகத்தில் வாழலாம். ஆகவே, இறந்த பின்னரும் இந்த உலகில் வாழ நாம் செய்ய வேண்டியது, நினைவு உள்ள போதே நம் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கான விருப்பத்தை தெரிவித்து அதற்கென்று உள்ள அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டால், நாம் நிச்சயமாக இந்த மண்ணில் என்றென்றும் வாழலாம்.

Sunday, October 14, 2012

அசைவம் உணவுகள் !

முட்டை பொரியல்


முட்டை உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அதில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அந்த முட்டையை இதுவரை குழந்தைகளுக்கு வேக வைத்து தான் கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த முட்டையை பொரியல் போன்று செய்து கொடுத்தால், அதை அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அத்தகைய முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா

தேவையான பொருட்கள்:
முட்டை - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் சிறிது உப்பை போட்டு, நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் சோம்பை போடவும். சோம்பு வெடிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதோடு கறிவேப்பிலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு. 1-2 நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 1-2 நிமிடம் கிளறவும்.
பின்பு அடித்து வைத்துள்ள முட்டையை அத்துடன் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி வேக விடவும். முட்டை வெந்ததும் அதில் கொத்தமல்லியை போட்டு, கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான முட்டை பொரியல் ரெடி!!!



முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி

விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, உடலுக்கு சத்தை வழங்கும் வகையில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அதற்கு முட்டை ஸ்பாஞ்ச் தான் சரியானது. அதிலும் இதுவரை முட்டையை அப்படியே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த ரெசிபியில் அந்த முட்டையில் சில பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்து சாப்பிடுவோம். மேலும் இந்த ரெசிபி டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். இப்போது இந்த முட்டை ஸ்பாஞ்ச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
முட்டை - 5
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - பாதி (நறுக்கியது)
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் சிறு சிறு பௌல்களை எடுத்துக் கொண்டு அதில் வெண்ணெயை தடவி, முட்டைக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, அந்த பௌல்களை வைத்து, தண்ணீரானது பௌலை விட அதிகமாக இல்வாதவாறு இருக்க வேண்டும்.
பின்னர் குக்கரை முழுவதுமாக மூடி விடாமல், ஓரளவு மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து, இறக்கி விடவும்.
இப்போது சூப்பரான முட்டை ஸ்பாஞ்ச் ரெடி!!! இதனை பட்டர் பேப்பரைக் கொண்டு பக்கவாட்டில் கவர் செய்து பரிமாறலாம்.
குறிப்பு: இதற்கு குக்கருக்கு பதிலாக, இட்லி பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.


ஸ்பைசி மீன் மசாலா

பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு...
சாலமன் மீன் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், வெந்தய பொடி, கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான மீன் மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.

இறால் மசாலா


கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் இறால் மிகவும் நல்லது. அத்தகைய இறாலை லீவு நாட்களில் வீட்டில் பொறுமையாக சமைத்து, ருசித்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது அந்த இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

சிக்கன் குருமா

சிக்கன் குருமா என்பது காரசாரமான இந்திய உணவுகளில் ஒன்று. இதனுடைய ஸ்பெஷல் என்னவென்றால், இந்த டிஷ்ஷில் தயிரை பயன்படுத்துவது தான். மேலும் இந்த டிஸ் மிகவும் காரசாரமாக இருக்கும். இதை காரம் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டுமல்லாமல், அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில், அதன் சுவை இருக்கும். இப்போது அந்த சிக்கன் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூளைப் போட்டு பிரட்டி, சற்று நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, பிசைந்து கொண்டு, அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரை மணிநேரமோ அல்லது 10 நிமிடமோ ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் போட்டு வதக்கவும். பின் அந்த தேங்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் பிசைந்து வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு கலக்கி, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதில் மல்லித்தூள், மிளகு மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கிளறி, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, மறுபடியும் 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.
இறுதியாக தயிரை ஊற்றி, வாணலியை மூடி 5-7 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான சிக்கன் குருமா தயார்!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

மட்டன் கீமா புலாவ்

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே ஒரு குஷியா தான் இருக்கும். ஏனெனில் அப்போது தான் வாய்க்கு ருசியாக, நிம்மதியாக சாப்பிட முடியும். ஆகவே அவ்வாறு ருசியாக, காரசாரமாக, கொஞ்சம் பிரியாணி போன்று, மட்டன் கொத்துக்கறியை வைத்து செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மட்டன் கீமா புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 250 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
முந்திரி - 1/4 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் கொத்துக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அதனுடன் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி, மிளகுத் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அதோடு சுத்தம் செய்த கீமாவையும் சேர்த்து வதக்கவும்.
* பின்னர் அதில் வேண்டிய உப்பு சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, சிறிது நேரம் கறியை வேக விடவும்.
* பின் மூடியைத் திறந்து, பாசுமதி அரிசியை கழுவி, அதில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
* இப்போது சுவையான மட்டன் கீமா புலாவ் ரெடி!!! இதற்கு மட்டன் கிரேவியை சைடு டிஷ்-ஆக தொட்டு சாப்பிடலாம்.



Friday, July 20, 2012

கருவாச்சி காவியம்

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
- வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : கருவாச்சி காவியம்
ஆசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 2006
வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்



மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை இது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்குப் பிடித்த தொடர் எதையும், ஒவ்வொரு பகுதியாக காத்திருந்து படிக்காமல், முழு தொகுதியாகத்தான் படிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்திருக்கிறது.

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.


Download Link

Tuesday, October 25, 2011

அலை ஓசை


பேராசிரியர் கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்'' "பார்த்திபன் கனவு", ஆகிய வரலாற்றுப் புதினங்களைப் பற்றி பல பேருக்கும் தெரிந்திருக்கும். ஆசிரியரின் சமூக நாவல்களில் மிகப் பிரபலமானதும், அவருக்கு சாகித்திய அகாதமி விருது வாங்கிக் கொடுத்ததுமான "அலை ஓசை" நாவல், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

'சாலையின் இரு புறத்திலும் ஆலமரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளைப் போல் அந்தச் சாலை எங்கே ஆரம்பமாகிறது, எங்கே முடிவாகிறது என்று தெரிந்துகொள்ள முடியாதிருந்தது. பகவானுடைய விசுவரூபத்தின் அடியும், முடியும்போல், இரு திசையிலும் அடர்ந்த மரக்கிளைகளிடையில் அந்தச் சாலை மறைந்துவிட்டது.'என்று தொடங்கிப் படிக்கத் துவங்குகையில், நாமும் அந்தச் சாலையிலேயே நம் பயணத்தைத் துவக்குகிறோம்.

லிங்க்

சிவகாமியின் சபதம்


சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை,
காஞ்சி முற்றுகை,
பிக்ஷுவின் காதல்,
சிதைந்த கனவு
என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

லிங்க்

குறிஞ்சி மலர் நாவல்



அன்பு நண்பர்களுக்கு திரு நா பார்த்தசாரதி அவர்கள் எழுதி கல்கியில் தொடராக வெளி வந்த முழு நீள நாவல் குறிஞ்சி மலர் லிங்க்
படித்து மகிழுங்கள்...

குறிஞ்சி மலர்

என் நெஞ்சத் தோட்டத்தில்
அவள் நினைவு மொட்டுக்கள்
நொடிக்கு நொடி மலரும்
அதிசய
குறிஞ்சி மலர்

விவேகானந்தரின்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

விவேகானந்தரின் விவேக கதைகள் லிங்க்



சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:


"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியிலே கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர் பின்பற்றும் தன்மை யாலே துங்கமிகு நெறி பலவாய் நேராயும் வளைவாயும் தோன்றி னாலும் அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ!"

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் லிங்க்

 




பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

முதல் பாகம் - புது வெள்ளம்

இரண்டாம் பாகம் - சுழற்காற்று


மூன்றாம் பாகம் - கொலை வாள்


நான்காம் பாகம் - மணிமகுடம்


ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்


பொன்னியின் செல்வன் ஆகிலத்தில் லிங்க்

பொன்னியின் செல்வன் தமிழ் பதிப்பகம் லிங்க்



Sunday, October 23, 2011

தமிழை வளர்த்த அறிவியல்

நடைமுறையில் தமிழை வளர்க்க
நாற்றங்கால் அமைத்ததும்,
அறிவியல் உரத்தை
அதிலே தெளித்ததும்,
எதார்த்தத்தைக் கையில்
எடுத்துக் கொண்டதால் தான்.

விமர்சனங்களுக்கு ஆளான
போதும்,
விடாப்பிடியாய்க்
கொள்கைப் பிடிப்பைக் கொண்டது
எழுத்தில் கொண்ட பற்றினால்
தான்.

பொறியியல் வல்லுநரை
இயந்திர உலகம் மட்டுமல்ல,
இயற்றமிழ் உலகமும்
இழந்து நிற்கிறது.

சித. அருணாசலம்,
சிங்கப்பூர்

எண்ணப்பறவை எங்கே சென்றாய் ?

சிறகை விரித்து விட்டாய்
உயர எழும்பி விட்டாய்
உலகை மறந்து விட்டாய்

நீ எங்கே சென்று விட்டாய் ?

நீ சென்ற உலகில் கூட
நிறைந்திருக்கும் உன் வாசகர் கூட்டம்
நீ எழுதும் கதைகளை உன்
கருத்தான கட்டுரைகளை
கண்வழியே புசிப்பதற்காய்
பசித்திருக்கும் கூட்டம் ஒன்று

விஞ்ஞான உலகத்தில்
வியத்தகு வகையில் சிறப்புற்றும்
விடவில்லை அன்னைத்தமிழின் பற்று
விளையாடினாய் இலக்கிய முற்றத்தில்
வாசித்தோம்! அதனாலே
யோசித்தோம் .....

சுஜாதா என்னும்
சிந்தனைச் சிற்பி நீ
செதுக்கிய சிற்பங்கள் ஒவ்வொன்றும்
சொல்லும் கதை பன்முக வடிவங்கள்

"அம்பலம்" வழியே
அணை போட்டு பாய்ச்சினாய்
அன்னைத் தமிழின்
அன்பு இலக்கியத்தை

ஓரிரு எண்ணங்கள் என நீ
ஓராயிரம் கருத்துக்களை பகிர்ந்து
ஓடும் மனத்திரையின் காட்சிகளை
ஓவியமாய் வடித்த எழுத்தோவியன் நீ

பலகலைகள் தேர்ந்து நம் தமிழை
பலமான மொழியாக உயர்த்துங்கள் என்றே
பலமாகக் கத்திய முண்டாசுக் கவி
பாரதியின் கனவுகளை மெய்ப்பட வைக்க
பலதுறைகளிலும் உன் ஆற்றலை
பரிசாகக் கொடுத்தவன் நீ

சிறுகதைகள் மட்டுமல்ல , கட்டுரைகள் மட்டுமல்ல
திரைக்கதை வசனம் கொண்டு
திக்கெட்டும் திகழ்ந்தவன் நீ

தமிழகம் மட்டும் அழவில்லை சுஜாதா
தமிழர்கள் அனைவரின் கண்களிலும் நீர்
தம் வீட்டு இலக்கிய தோட்டத்து ரோஜா
தமை விட்டுச் சென்றதே என்று

உன்னுடல் இம்மண்ணை விட்டு
மறைந்திருக்கலாம்
ஆனால் உன் புகழ் இந்த
மண்ணோடு கலந்தது
அகிலம் முழுவதும் வாழும்
அனைத்துத் தமிழர்களின் மனங்களிலும்
அணையாது ஒளிவீசும் உன் புகழ்

இணையத்தின் மூலம் தமிழ் வளரும் என்று
இடித்துச் சொன்ன வீரத்தமிழன் நீ
இணையமொழி தமிழாக எத்துணை செயல்கள்
இனியவன் நீ ஆற்றினாய்
இதை இனி மறப்பரோ தமிழர்.

சுந்தரத் தமிழில் அற்புத படைப்புகள்
சிரப்புறக் கொடுத்தவனே எங்கள்
சுஜாதா உனது நினைவுடனேயே
சுடரும் எழுத்துக்கள் தெறிக்கட்டும்

உன் புகழ் வாழ்க ! உன் லட்சியம் வாழ்க !
உனை ஈன்ற தமிழன்னை வாழ்க
உன எம் சொந்தமாக்கிய தமிழ் வாழ்க.

அன்புடன்
சக்தி சக்திதாசன்

சுஜாதா - நினைவில் நின்றவை

சுஜாதா என்றொரு பிரபஞ்சம்.

- ருத்ரா

தமிழ்சிற்பியே, தமிழ் இலக்கியத்தை நீ செதுக்கியபோது தெறித்த "சில்லுகள்" தோறும் கம்பியூட்டரின் சொல்லுகள் ஆயின.

"நைலான் கயிறு" மூலம் ஊஞ்சல் கட்டி உன் சிறுகதை விளையாட்டுகளை
தமிழ் வாசகர்களிடையே ஆரம்பித்து வைத்தாய்.

உன் நைலான் கயிறு நடைக்குபிறகு மற்றதெல்லாம் "காயிலான்"
கடைச்சரக்காகி போனது.

காதலாவது..கத்தரிக்காயாவது என்று ஒரு உட்குறிப்பை பொதிந்து வைத்தாலும் உன் கதைகள் லேட்டஸ்டாய் சுடிதார் உடுத்திக்கொண்டு வந்து முன்னே துறுத்திக்கொண்டு குறுகுறுப்பதில் கதையை கோர்க்கும் அச்சகத்து கம்பாசிடர்கள் கூட கணேஷ்களாயும் வசந்த்களாயும் காலரை உயர்த்தி விட்டுக்கொள்வார்கள்.

துப்பறியும் கதைகளை தொடங்கிவைத்தாலும் துப்பு கெட்ட இந்த சமுதாயமே
ஒரு குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறது என்று ஒரு புகைமூட்டமாய் உன் எழுத்துக்களில் நீரோட்டம் காட்டினாய்.

ஆம் நீயும் கூட எங்களுக்கு ஒரு புதுமைப்பித்தன் தான்.

எலக்ட்ரானிக் யுகத்து புதுமைப்பித்தன் நீ.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் கிழிந்த கோரைப்பாய்களும் காரை பெயர்ந்த வீட்டுச்சுவர்களும் செட்டிங் போட்டு உயிர்ப்போடு நிற்கும்.

செட்டியார் கடையில் கடன் வாங்கும் நடுத்தர நத்தைக்கூட்டுக்குள் லாவாவை கொப்புளிக்கத்தெரியாத எரிமலைகள் அரைத்தூக்கத்தில் கிடக்கும்.

நீயோ ப்ராக்டிகலாக அதாவது கற்றதையும் பெற்றதயும் கலக்கலாக்கி ஒரு அமிலக்கரைசலை எழுத்துக்களில் சிறு குழந்தை சாதாரணமாய் ஒண்ணுக்கு போது போல் காகிதங்களை நனைத்திநப்பாய்.

அதில் மெதுவாக தீ மூளுவது கூட ஜெயராஜின் வண்ணப்படத்தில் எழுச்சி காட்டும்.

நீ இன்னொரு புதுமைப்பித்தன் தான்.

இப்படி சொன்னால் அந்த புதுமைப்பித்தன் ஒன்றும்
கோபித்துக்கொள்ளப்போவதில்லை.

மணிக்கொடி நரம்பின் தொப்பூள் கொடி அவனிடம் வேர் விட்டிருந்தது என்றால்
உன்னிடம் அதன் உயிர்மகரந்தங்கள் நிறையவே ஒட்டியிருக்கின்றன.

புதுமைப்பித்தன் கதைகளில் மனிதனின் மனவெளியின் வெடிப்புகள்
உருவெளி ஓவியங்களாய் (ஹாலுசினேஷன்) படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

போலித்தனத்தின் மீது கண்ணுக்குத்தெரியாத கருந்தேள் ஒன்று கொட்டுவது போல் ஆனால் கொட்டாமலேயே ஒரு சமுதாயவலியை ஊமையாய் "ஓங்காரம்"
செய்து கொண்டிருக்கும்.

உன் கதைகளில் நாகரிகம் விஞ்ஞானப் பூச்சுடன் ஒரு அக்ரிலிக் சாயத்தில்
கண்களை கூச வைத்துக்கொண்டே இருக்கும்.

மரத்துப்போன இந்த பம்மாத்து மனங்களுக்கு நறுக்கென்று ஊசி போட்டு
கருத்து ஊன்றுவதில் ஒரு நுட்பம் உண்டு.

ஒரு திட்பம் உண்டு புதுமைப்பித்தனிலிருந்து பதியம் போட்ட
புதுமைச்சித்தன் நீ.

மக்கள் உணர்ச்சிகளின் மண்ணணுவை அணு அணுவாக
அவன் எழுதினான்.

நீயோ மின்னணுயுகத்தில்
மனிதனின் நிமிடத்துக்குள் கூட
நுழைந்து
அதன் கோடிக்கணக்கான
துடிப்புகளான
நேனோ செகண்டுகளை
ஒரு கரப்பான் பூச்சிபோல
"படம் வரைந்து பாகம் குறித்து காட்டிவிட்டாய்"
அவன் சமுதாயத்தை
தோலுரித்துக்காட்டினான்.

நீயோ
தோலுரிக்காமலேயே
உன் எக்ஸ்-ரே கண்ணால்
அந்த அவலங்களை
நிர்வாணமாக்கினாய்.
அவன் சமூகவிஞ்ஞானத்தை
எங்களுக்கு புகட்டினான்.

நீயோ
ஒரு விஞ்ஞான சமூகத்தை
எங்களுக்கு விளக்கிக்காட்டினாய்.

விஞ்ஞானிகளையும்
உன் பேனாக்களில் அடைத்து
அற்புதம் காட்டினாய்.

ஐன்ஸ்டீன்களையும்
டாக்டர்.

பென்ரோஸ்களையும்
ஸ்டீ·பன் ஹாக்கிங்ஸ்களையும் கூட
எங்கள் நெஞ்சில்
நீங்காமல் நிற்கும்
கதாநாயகர்களாக காட்டியிருக்கிறாய்.
இயல் இசை நாடகம்
என்ற முத்தமிழ் தெரியும் எங்களுக்கு
ஆனால்
நீ தானே
"இயற்பியல் தமிழையும்" (thamiz with physics)
எங்களுக்கு இயல்பாய் ஆக்கினாய்.

அதனால்
இந்த மின்னணு யுகமும்
மின்னஞ்சல் யுகமும்
தமிழின் முகம் மாற்றின.

உன் கதைகளின்
காதலன் - காதலி கூட
உனக்கு வெறும் "பைனரி" தான்.

பூலியன் அல்ஜீப்ராவிலிருந்து
புளிச்சு போன இந்த
காதல் அல்ஜீப்ரா வரைக்கும்
நீ காட்டிய மந்திர வித்தைகள்
எங்கள் மனத்தையெல்லாம்
கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

புளிக்க புளிக்கத் தான்
கள் சுவைக்கும்
என்று
உன் காதல் நாவல்கள்
ஒரு ·பார்முலாவை
உள்ளே
போர்த்திவைத்திருக்கும்.
விஞ்ஞானத்தின்
எந்த மூலையையும்
இனிப்பு தடவி
உன் எழுத்துக்களில்
நீ தரும்போது
தமிழ் வாசகர்களெல்லோரும்
கொள்ளையடிக்கப்பட்டுவிட்டார்கள்.

அப்படித்தான்
இதயத்தின் ஆரிக்கிள்- வெண்டிரிக்கிள் பற்றி
பத்திரிகையில்
நீ பாடம் எடுக்கும் போது
அந்த அற்புதத்தை அறிய
உன் இதயமே
அங்கு வந்து உட்கார்ந்துகொண்டது.

ஆம் அதனால்
அது துடிக்க மறந்தது...
அந்தோ கொடுமை..
இதோ
அந்த லட்சக்கணக்கான கண்களின்
கண்ணணீர் வெள்ளத்தில்
அந்த இதயமும்
வேதனையால் துடித்துக்கொண்டு தான்
இருக்கிறது.

தமிழ் எழுத்துக்களின்
கலைக்களஞ்சியமே!
உன்
கலைக்களஞ்சியத்தை நீயே புரட்டிப்பார்.

சுஜாதா என்ற வார்த்தைக்கு
என்ன அர்த்தம் போட்டிருக்கிறது என்று....
"பிறக்கும்போதே
21-ஆம் நூற்றாண்டை நூல்கண்டாக்கி
பட்டம் விடத்தெரிந்த மேதை."
ஆம்.

காலம் வேகமானது தான்.
அதையும் விட வேகமாக சிந்திக்கும்
ஒளியாண்டுகளை(light years)
உடையவன் நீ.

டேக்கியானின்(tachyon) வேகம்
உன் அறிவின் வேகம்.
காலமானார் சுஜாதா
என்பதைகூட
நீ கட்டுரை எழுதினால்
"சுஜாதாவால் காலம் தோற்கடிக்கப்பட்டது"
என்று தான் தலைப்பு கொடுத்திருப்பாய்.

அதுவே தனி முத்திரை கொண்ட
சுஜாதாவின் space-time எனும்
சுஜாதாவின் மகத்தான பிரபஞ்சம்.

- ருத்ரா

Saturday, August 6, 2011

முன்னேற்ற மூல மந்திரங்கள்

முன்னேற்ற மூல மந்திரங்கள்

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“”ரிலேட்டிவிட்டி தியரி என்கிற உங்கள் அரிய விஞ்ஞான உண்மையை நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் இந்த உலகம் என்னவாகி இருக்கும் ?”

ஐன்ஸ்டீன் சிரித்தபடி, “”ஒன்றும் குடி முழுகிப் போய் இருக்காது… வேறு ஒருவர் அதைக் கண்டறிந்து வெளிப்படுத்தி இருப்பார்” என்றார்.

அதிர்ச்சி அடைந்த கேள்வியாளர், “”இன்னொருவர் கண்டறிந்து வெளிப்படுத்த பல ஆண்டுகள் ஆகி விடும் அல்லவா ?” என்று இழுத்தார்.

சிறிது யோசித்த ஐன்ஸ்டீன்… “”அதிகபட்சம் இன்னும் ஒரு மூன்று வாரங்கள் வேண்டுமானால் தள்ளிப்போயிருக்கும். அவ்வளவுதான்”என்றார். ஆம்… இது உண்மை. உலகில் ஒரே ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் இதைக்கண்டறிய முடியும் என்பதில்லை. காரணம் அதே கால கட்டத்தில் பல விஞ்ஞானிகள் பல பகுதிகளில் அத்தகைய சிந்தனைத் தாக்கத்துடன் அதே கோட்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர். யார் முந்தப் போகிறார்கள் என்பதற்குத்தான் உலகம் காத்திருந்தது. ஒரு பந்தயம் போல…
வேறு ஜெர்மானிய விஞ்ஞானியும் ரிலேட்டிவிட்டி தியரியின் பல கூறுகளை ஆய்வு செய்திருந்தார்.



ருத்ரன் கருத்துக்கள்

தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி?

திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற படி குரல்நாண் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதற்கான தகுந்த அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டும். பிறகு பேசுவதற்கான பயிற்சிகள் உள்ளன. பேசுவதற்கு பழக வேண்டியிருக்கும்.

திக்குவாய் வேறு. தாழ்வு மனப்பான்மை வேறு. நம்மிடம் இது இல்லை என்று குறையை நினைத்துக் கொள்வது, அந்தக்குறையை பெரிதாக்கிக் கொள்வதுதான் தாழ்வு மனப் பான்மை. இதற்கு அடிப்படைக் காரணம், தொடர்ந்து நாம் அடுத்தவர்களைப்பார்த்து ஒப்பிடுவது. அவனைப்போல் நான் இல்லையே என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருப்பதால் வருவதுதான் தாழ்வுமனப்பான்மை. இது வராமல் இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலிருந்தே தயாராக இருக்க வேண்டும். வந்துவிட்டால் சுலபத்தில் போகாது. அதற்கு அமர்ந்து யோசிக்க வேண்டும். நிறைய பேச வேண்டும்.

சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு சின்ன வெற்றிகள் பெறவேண்டும். சின்னச் சின்ன வெற்றிகள் வர வர மனதில் சந்தோஷமும் தைரியமும்கூட ஆரம்பிக்கும். தானாகவே நம்பிக்கையின் அளவு அதிகமாகும். அப்போது தாழ்வு மனப்பான்மை குறையும். சின்னச்சின்ன வெற்றிகளை நோக்கி நகரும்போது அதில் முழு முனைப்போடு ஈடுபடும்போது தாழ்வு மனப் பான்மையை உணரக்கூட மனதுக்கு நேரமும் இருக்காது. இடமும் இருக்காது. இது என் வாழ்வில் நான் அனுபவித்துக் கற்றுக்கொண்ட விஷயம்.

அடிக்கடி ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? எப்பொழுதும் உற்சாகமாக இருப்பது எப்படி?

அடிக்கடி மனம் சோர்வாக இருந்தால் அது நோயின் ஆரம்பமாக இருக்கலாம். எச்சரிக்கையாக பாருங்கள். அது நோயில்லை. எல்லா விஷயத்திற்கும் உடைந்து போவதுபோல் ஆகி விடுகிறது. மனதில் தெம்பில்லை, வலுவில்லை போன்ற நிலை இருந்தால் உங்களுக்கு நம்பிக்கை குறைவு என்று அர்த்தம்.

நாம் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை என்கிற சலிப்பு வரும்போது கூட நம்பிக்கை குறையும். எனவே வாழ்வை சுவாரசியமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும். எப்படி? நீங்கள் நடனம் கற்றுக் கொள்வது அரங்கேற்றம் செய்வதற்காக அல்ல. அந்த நேரத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதற்காகத்தான்.
உடற்பயிற்சி சாலைக்குப்போவது அல்லது நடனப்பள்ளிக்கு போவது. அது உங்கள் விருப்பம். எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதற்குப் போகலாம்.

இதுபோல ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு போகும்போது வாழ்க்கை சுவாரசியமாகும். ஆனால் இது தற்காலிகம்தான். இன்றைக்கு நான் நடன வகுப்பிற்கு போகிறேன். அரங்கேற்றம் செய்ய வேண்டும். பிரபு தேவாவை விட பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் போதுதான் பிரச்சனை வரும்.

தற்போதைக்கு இந்தப் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கான வழி என்கிறபோது சோர்வுகள் விலகும். சோர்வுகளை தற்காலிகமாக நீக்கிக் கொள்ளும் அதே நேரத்தில் சோர்வின் காரணம் என்ன? நம் மனதின் செயல்பாடென்ன? மனதின் எண்ணம் என்ன? அதன் தாக்கம் என்ன? என்று கவனிக்கும்போது இந்தப்பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண முடியும்.

குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கும், கணவன் மனைவி குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கும் காரணம் என்ன? நிவாரணம் என்ன?

ஒன்றுமில்லை. எதிர்பார்ப்புதான். நான் அன்பு கொடுக்கிறேன். நீ அன்பு கொடுக்கவில்லை. நான் மிகவும் அன்பாய் இருக்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரியவில்லை. அவளுடைய அன்பு ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது. அவனுடைய அன்பு அவளுக்காக ஏசி பொருத்துவது என்று இருக்கும். ஏசி வாங்கிக் கொடுப்பதில் செலவு அதிகம்தான். ஆனால் சாக்லேட் வாங்கித்தருவதில் இருக்கிற நெருக்கம் அவளுக்குத் தேவைப்படும். அவனுக்கு இது புரியாது. இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக் கிறது.

அன்பு என்பது கணக்கில்லை என்பது தெரிந்தாலே இது சரியாகிவிடும். கொடுக்கல் வாங்கல் இல்லை. அன்பு என்பது கொடுப்பதற்கு மட்டும்தான். திருப்பிவாங்குவதற்கு இல்லை என்று தெரிந்து கொண்டாலே பிரச்சனை வராது. இது குடும்பத்தில் மட்டுமல்ல. எல்லா இடத்திலும் இருக்கிறது.

தோல்வி ஏற்படும் சமயங்களில் தற்கொலை எண்ணம் வருகிறது. தவிர்ப்பது எப்படி?
தற்கொலை செய்வதற்கான எண்ணம் வருவதற்கு அடிப்படையான காரணம், வாழ்க்கையில் இனி எதுவுமே முடியாது என்று நினைப்பதால்தான். இனி எதுவும் முடியாது என்று எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு நினைக்கலாம்.

எல்லாவற்றையும் எப்போது செய்து முடிப்பது? இறக்கும்வரைக்கும் மனிதனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. தற்கொலை எண்ணம் என்பது ஒரு தப்பித்தல். வாழ்க்கையை விட்டு ஓடிவிடுகிறேன் என்கிற தப்பித்தல். அது சரியல்ல. உங்களுக்கு அது தோன்றிவிட்ட தென்றால் அதை மாற்றிக்கொள்வது சாத்தியம்.

ஏனென்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் நெருக்கமானவர்கள் தற்கொலை எண்ணம் பற்றிச் சொல்லும்போது உடனடியாக அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இப்படிச் சொல்பவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இது மன அழுத்தத்தின் அறிகுறி. எனவே அடுத்தவர்கள் தற்கொலை எண்ணத்தைப்பற்றி எங்கே பேசினாலும் அதை உடனடியாக கவனத்தில் கொள்ளுங்கள். அதற்காக சிரத்தை எடுத்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க முயலுங்கள்.

நமது உள்சக்தியை உணர முயற்சிக்கும் போது மனஅழுத்தம் வருவதுபோல் இருக்கிறது. இதிலிருந்து வெளியில் வருவது எப்படி?

உள்சக்தி என்றால் என்ன? மன அழுத்தம் என்றால் என்ன? இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான அர்த்தங்கள் முக்கியம். உள்சக்தியைத் தெரிந்து கொள்கிறபோது வருத்தங்கள் வரவே வராது. ஏனென்றால் உண்மையை நோக்கி தேடலின் போது இடறலாம்; விழலாம்; ஆனால் வலிக்காது. எவரெஸ்ட் ஏறுகிறவர்கள் எத்தனை முறை விழுந்திருப்பார்கள். அந்த வலி ஒரு பொருட்டாக இருந்திருக்காது. ஏனென்றால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்பது முக்கியம்.

உள்சக்தி நிஜமாகவே உள்சக்தியாகவே இருந்தால் அதை நோக்கிப் போகிறபோது மன அழுத்தம் வராது. அடுத்தவர் சொல்வதுபோல கற்பனை செய்துகொண்டு லிஃப்டில் போவது போல் குண்டலினி சக்தி மேலே ஏறும் என்று நினைத்தால் அப்போதுதான் மனஅழுத்தம் வரும். ஏனென்றால் அது நடப்பதில்லை.

எதிர்பார்த்தது நடக்காத போது, ஏன் அது கிடைக்கவில்லை. என் கணக்கு தவறா? அல்லது நான் ஆசைப்படுவது தவறா, எனக்கு அந்தத் தகுதி இல்லையா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மன அழுத்தம் வராது.

அடுத்தவர்களுக்கெல்லாம் உள்சக்தி தெரிகிறது. எனக்கு தெரியவில்லையே என்று நினைத்தால் மனஅழுத்தம்தான் வரும். எனக்குத் தெரிந்தது என்று சொல்லி ஏமாற்றுபவர்கள்தான் அதிகம். தெரிந்தவர்கள் சொல்வதில்லை.

சுகி. சிவம்

சுகி. சிவம் அவர்களின் படைப்புக்கள்

  • ஒளிமயமான எதிர்காலம் : பணக்காரனாவது எப்படி? on Sep 2005
  • ஒளிமயமான எதிர்காலம் on Aug 2005
  • பூமி கருவறையா? கல்லறையா? on Jul 2005
  • ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்! on May 2005
  • ஒளிமயமான எதிர்காலம் on Apr 2005

வாழ்க வளமுடன்


வேதாத்திரி மகரிஷிவாழ்க வையகம் வாழ்க வளமுடன்

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.


அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ
அவனில்தான்நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால்நீ சிறியோன்
அவனை அறிந்தால்நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்தைடம்
அறிவு முழுமை அதுமுக்தி.

- வேதாத்திரி மகரிஷி

மகரிஷி சிந்தனைகள்

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

விலங்கினப் பதிவு
ஐயறிவு வரையில் பரிணாமமடைந்த உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்துண்டு வாழத் தெரியாது. அதனால், தாவர இனம் தவிர மற்ற உயிரினங்கள் வேறு உயிரினங்களைக் கொன்று, உண்டு வாழ்கின்றன. ஆறு அறிவுடைய மனித இனம் ஐயறிவுடைய விலங்கினத்தின் வித்துத் தொடராகவே பரிணாமமடைந்துள்ளது. இதனால், மனிதனிடத்தில் ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள எல்லா உயிரினங்களின் தேவையுணர்வு, செயல்முறைகள், வாழ்க்கை வழி அனைத்தும் மரபுவழிப் பதிவுகளாக (Hereditary Characters) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. விலங்கினத்தின் வாழ்வில் உள்ள மூன்று விதமான செயல்பதிவுகளை மனித இனத்தில் அடையாளம் காணலாம். அவை :-

1. பிற உயிரைக் கருணையின்றித் துன்புறுத்துதல் அல்லது கொலை செய்தல்.

2. மற்ற உயிர்களின் உடலைப் பறித்து உண்ணுதல்.

3. மற்ற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைத் தன் முனைப்பிலான அதிகாரத்தாலோ, தன்
இன்பத்துக்காகவோ பறித்தல்.

என்பதாகும். இம்மூன்றையும் சுருக்கமாக உயிர்க்கொலை, பொருள் பறித்தல் (திருட்டு), சுதந்திரம் பறித்தல் என்ற மூன்று குற்றங்களாகக் கொள்ளலாம். இம்மூன்று செயல்களும் விலங்கினத்திற்குக் குற்றமாகா. அவற்றிற்கு ஒத்தவை; ஏற்றவை. ஏனெனில், அவற்றிற்கு உணவு உற்பத்தி செய்து உண்டு வாழத் தெரியாது. ஆனால், உழைத்துப் பொருள் ஈட்டிப் பகிர்ந்துண்டு இன்புறும் மனித வாழ்வில் இந்த மூன்று குற்றங்கள் தான் எல்லா வகையான துன்பங்களுக்கும் வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணங்கள். விலங்கினப் பதிவுகளை நீக்கிச் சிக்கலின்றி வாழ்வோம்.

வாழ்க்கையின் சிற்பி
இன்று மக்களிடை “இவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று அவரும் “அவரைக் கெடுத்துவிட வேண்டும்” என்று இவரும் இன்னும் பலப்பல விதத்திலும் தீய எண்ணம் மலிவாகக் காணப்படுகிறது. ஆனால், அந்த எண்ணங்கள் செயல்பட விடாமல் அவரவர்களும் எதிர் நடவடிக்கை மூலம் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். செயலுக்கு வர முடியாத இந்தத் தீய எண்ணங்களின் தொகுதி என்ன ஆகும்? செயலாகாத வரை அவற்றுக்கு நிறைவும் வராதே! அதுதான் இன்றெல்லாம் நாம் காணும் இயற்கை உற்பாதங்களாக – அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லோருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், இயற்கையே தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறுதான்.

ஒளி ஒன்றுதான். அது ஆற்றிய செயல்களும், விளைவுகளும் பலப்பல. அதுபோல் எண்ணமும் ஒன்றுதான். என்றாலும் அது ஆற்றும் செயலும் விளைவுகளும் கணக்கிட முடியாதன. எண்ணத்தின் விளைவறியாது எண்ணி எண்ணி அது விளைவாகிச் செயலாக மலரும்போது அவற்றைத் தாங்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அவனே வலையும் விரித்து, அதற்குள் அவனே சிக்கிக் கொள்கிறான். அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே.
மறைபொருட்களை உணரும் நிலை

பிரம்மஞானம் உலகில் மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடைப்பட்டதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அதை உணர்ந்து கொண்டு, தக்க முறையில் அந்தத் தடைகளைக் களைய வேண்டும். தடைக்குக் காரணங்களாவன:

அனைத்தியக்க அருட்பேராற்றலான இறைநிலை – பிரம்மம்,
அதிலிருந்து தோன்றிய விண்,
விண் சுழலிலிருந்து தோன்றிய காந்தம்,
காந்தத் தன்மாற்றங்களாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
– இவற்றின் கடைசி அலை இயக்கமாகிய மனம்.

இவையனைத்தும் மறை பொருட்கள். இவை இல்லையென்று மறுத்துக் கூற முடியாது. இவ்வாறு உள்ளன என்று புலனறிவுக்கு எடுத்துக் காட்டவும் முடியாது. ஆயினும், இவற்றை அறிவதற்காகவே ஆறாவது அறிவு எனும் சிந்தனையாற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. ஐந்து புலன்கள் மூலம் தோற்றப் பொருட்களை உணர்வது ஐயறிவு.

புலன்கள் மூலம் உணரப் பெறும் பொருட்களுக்கு மூலமான மனம், காந்தம், விண், மெய்ப்பொருள் இவற்றை உணரக்கூடிய அறிவு தான் ஆறாவது அறிவு. புலன்களால் பொருட்களை உணரும்போது மன அலைச்சுழல் மிகவும் விரைவாக இயங்குகிறது. அந்த விரைவு நிலையில் மறைபொருட்கள் விளங்கா. மன அலைச்சுழல் விரைவை அகத்தவச் சாதனையால் குறைத்து, அந்த நுண்ணிய நிலையில் தான் மறைபொருட்களை உணர முடியும்.

மெளனம்

நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

அலையின் தன்மை

நமது உடலுக்குள்ளாக இயங்கக் கூடிய உயிராற்றல், அலையாக ஜீவகாந்த சக்தியின் மூலம் எந்தப் பொருளோடு தொடர்பு கொண்டாலும், அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாற்றம் பெறும். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்பொழுதுமே, கோள்களிடமிருந்தும், பொருட்களிடமிந்தும், மக்களிடமிருந்தும் அலைகள் வந்து கொண்டேயிருக்கும். அந்த அலைகள் சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.

பாதகம் என்பது வெளியிலிருந்து வரக்கூடிய ஆற்றல். நம்மிடையே இருக்கிற ஆற்றல் மீது அதிக அழுத்தம் தருமானால், அதைத் தாங்க முடியாதபோது ஒரு துன்பத்திற்குரியதாக மாறுகிறது. அதைத் தாங்கும் போது அதுவே இன்பமாக மாறுகிறது. நமக்கு எப்பொழுதுமே கோள்களிலிருந்து வரக்கூடிய அலையினாலும், பொருட்களிலே இருந்து வரக் கூடிய அலையினாலும், நாம் செய்கின்ற செயல்களிலேயிருந்து வரக் கூடிய அலையினாலும், அதிகமாகப் பாதிக்கப்படாத ஒரு Steadiness தாங்கும் சக்தி (resistance power) அவசியம்.

அந்த ஆற்றலை ஏற்படுத்திக் கொள்வதற்காக நாம், நமது உடல், உயிர், ஜீவகாந்தம், மனம் இந்த நான்கையும் சேர்த்து ஒவ்வொரு பெளதீகப் பிரிவோடும் இணைக்க வேண்டும். உதாரணமாக, நிலம் என்ற மண்ணை எடுத்துக் கொண்டு அதையே நினைந்து, நினைந்து, நினைந்து மண்ணிலேயிருக்கக்கூடிய ஆற்றலுக்கும், நமக்கும் உறவை ஏற்படுத்தி, எப்போதும் நாம் தூங்கும்போதும், விழித்துக் கொண்டிருக்கும் போதும், எங்கே சென்றாலும் மண்ணிலிருக்கக் கூடிய ஆற்றல் நமக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். நன்மை தான் செய்ய வேண்டும் என்று சங்கற்பம் (Auto Suggestion) செய்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகக் கல்வி

ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படித் தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத் தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதே போல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன.

எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான ‘ஆன்மீகக் கல்வி‘யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உண்மையில் மனிதருக்குப் பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை.

ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெறவேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனிதகுலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய “பிரம்மஞானம்” பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து ‘மனநிறைவு‘ உண்டாகும்.

கருவில் திரு உடையார்

ஆத்மதாகம் கொண்ட மனிதன் இந்த நினைப்பிலே உருகி நிற்கும் போது, அந்த நினைப்பானது குருவை அவன் முன் கொண்டு வரும். குரு வருவதற்கு வேறு மார்க்கமேதும் கிடையாது.

ஓர் ஏற்புத் தன்மை இருந்தால் குருதானே இங்கே வருவார். எனவே, குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை. தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உயரட்டும். தானாகவே அவனுடைய எண்ணம் உயர்நிலையில் பக்குவப்படட்டும். குரு தானாக வருவார்.

மனிதனுடைய எண்ணம் என்பது என்ன? அது பிரம்மத்தினுடைய சாயை தானே? இயக்கம் தானே எண்ணமாக, அறிவாக இருக்கிறது? உணர்ந்த நிலையில் அறிவாகவும், மயக்க நிலையில் மனமாகவும் அதுவே குறிப்பிடப்படுகிறது. அது தானாக அமர்ந்த நிலையில் பிரம்மமாக உள்ளது. பக்குவப்பட்டவன் நினைத்தால் குருவர வேண்டியதுதானே? (Fraction demands and Totality Supplies).

நம் முன்னோர்கள் செய்த தவப்பயனே குண்டலினி யோகம்

அவ்வாறு குரு வரவேண்டியதைத் தடுப்பது எது? ஏற்கனவே எண்ணியிருந்த எண்ணங்களால் உருவான ஒரு மேடு மத்தியிலே தடுக்கிறது. இதைக் கணித்து உணர்ந்து கொண்டு நல்லதிலேயே மனதை நிலைக்கச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களுடைய நல்ல கர்மத்தின் விளைவாகத் தான் நீங்கள் இந்த மனவளக்கலையை ஏற்று இருக்க முடியும். அது நீங்கள் நேரடியாகச் செய்த தவப்பயனாக இருக்கலாம்; அல்லது உங்களது பெற்றோர்களுடைய தவப்பயனால் உங்களுக்கு இந்த உணர்வு நிலை கிட்டியிருக்கலாம். பெற்றோர்கள் மூலமாகக் கிட்டும் போது அதை நமது தமிழகத்துப் பெரியவர்கள் “கருவில் திரு உடையார்” என்று ஒரே சொற்றொடரில் வர்ணித்தார்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன